கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.



https://bookwomb.com/catalogsearch/advanced/result/?author=kanna&isbnno=&limit=36&name=&price%255Bfrom%255D=&price%255Bto%255D=&publisher=&sku=
========================================================================
VELANGUDI THIRUVILA / வேலங்குடித்திருவிழா
₹120.00

₹108.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹12.00 Discount: 10%
9788184026993
========================================================================
VAZHKAI ENUM SAALAIYILAE / வாழ்க்கை எனும் சாலையிலே

₹50.00 
₹45.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY

Save: ₹5.00 Discount: 10%
கவிஞர் கண்ணதாசன் 
கண்ணதாசன் பதிப்பகம்
9788184026993
கல்கி பத்திரிகையில் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.

பல்வேறு கோணங்களில் இருந்து மனித வாழ்க்கையை விமர்சிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.


========================================================================
VANAVASAM / வனவாசம்



₹170.00 
₹153.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹17.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184026122

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடந்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது. 
சில உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன். சில துயரங்களை தாழ்வு கருதாது 
கூறியிருக்கிறேன். எனது மேன்மைகள் என்று நான் குறிப்பிடுபவற்றை நான் பயத்துடனே 
குறிப்பிட்டுள்ளேன். ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது, ஒரு பெரிய 
கவிஞனின் வாழ்கையுமல்ல. வாழ்கை வழிபோக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல். 
ஏனென்றால், என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த 
நம்பிக்கையுண்டு. - கண்ணதாசன வனவாசம்´ என்பது, கண்ணதாசனின் சுயசரிதை. அவர் 
வாழ்க்கையில் நடந்தையெல்லாம் அருமையாக எடுத்துச் சொல்லியிருப்பார். அதில் தான் 
அண்ணா, கருணாவின் நடத்தைகளையெல்லாம் புட்டுபுட்டு வைத்திருப்பார். வேறு யாராவது 
எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் வந்திருக்காது. ´கிசு கிசு´ போல் பலவீனமாகி 
இருந்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை அம்பலப்படுத்திய 
போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய 
நடத்தைகள் குறித்தும் பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை 
கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது 
சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் 
கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்."

========================================================================
THOTTATHUP POOKKAL / தோட்டத்துப் பூக்கள்






₹40.00 
₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹4.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184025781; 8184025785

நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் 
இவற்றை எப்படி மறந்தார்கள் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 

========================================================================
THIRUKKURAL - KAAMATHUPPAAL
திருக்குறள் காமத்துப்பால் - உரை
₹50.00 
₹45.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹5.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020427

'குறளை முதலிலிருந்து படிப்பது சிரமமாக இருந்தால் கடைசியிலிருந்து படி ' என்று என் ஆசிரியர் கூறுவார் . நானும் கடைசியிலிருந்து துவங்குகிறேன் .அறம் ,பொருள் இரண்டுக்கும் எழுத பகவான் அருள வேண்டும் ". "பூவைவிட மெல்லிது, பொங்கி வரும் காமமது !.

அதனை அறிந்தவரும் அதனாலே மகிழ்ந்தவரும்
எத்தனைபேர் பூமியிலே ? ஏதோ சிலபேர் தான் !...... "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் 
காதலை வாழி மதி ".......
என்ற குறளுக்கு "பெண்ணில்லாத ஊரில் பிறந்தாளைப்போல வந்த வெண்ணிலவே ! என் கண்மணியின் முகம்போல கனிவான ஒளிவீச உன்னால் முடியுமா ?!..முடியும் என்றால் உன்னை நான் காதலிப்பேன் ..! 

========================================================================
THENDRAL VALARTHA TAMIL / தென்றல் வளர்த்த தமிழ்



₹100.00 
₹90.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹10.00 Discount: 10%
ஆர்.பி.சங்கரன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184028140

கடந்த, 1954 – 1962 வரை, கவியரசர், ‘தென்றல்’ எனும் கிழமை இதழை நடத்தினார். 
இதில் பலவிதமான படைப்புகளை கண்ணதாசன் எழுதி வந்ததோடு, கீர்த்தி மிக்க தமிழ் 
அறிஞர்களின் எழுத்தையும் வெளியிட்டார். 
அவ்வாறு வெளியான கட்டுரைகளில், மொழி உணர்வு குறித்த, 20 கட்டுரைகளை தேடிப்பிடித்து, 
‘தென்றல் வளர்த்த தமிழ்’ என தந்துள்ளார், ஆர்.பி.சங்கரன். 
தமிழின் மேன்மையை கவிஞர் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை இன்றைய இளைஞர்கள் 
இதை வாசிக்கும் போது உணர்வர் என்கிறார் சங்கரன். படித்துப் பாருங்கள்.
========================================================================

THALAIYANGANGAL / 

கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள்

₹40.00 
₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹4.00 Discount: 10%
கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020120; 8184020120

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன் 
ஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; 
அஞ்சேன் - கவிஞர் கண்ணதாசன்.
========================================================================
THAIPAVAI / தைப்பாவை
₹25.00 
₹22.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹3.00 Discount: 12%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184026849

தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே தைப்பாவாய் என அழைத்துப் 
பாடியிருப்பார்.


தைத்திங்கள் முதல்நாளை தமிழர் திருநாள் என்று கொண்டாடும் தமிழர் இயல்பையும் 
திராவிட இயக்க கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர் மரபு, வேளாண்மை, 
காதல் வாழ்வு, மூவேந்தர் மாண்பு உள்ளிட்ட பற்பல அம்சங்களைக் கொண்டு தைப்பாவை 
எனும் நூலை சுவைமிக்க கவிதைகளால் தொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.

தைமகள் வருகையால் தமிழர்களுக்குரிய எல்லா மேன்மைகளும் கிட்டவேண்டும் என்றும் 
கன்னியருக்கு திருமணம் கைகூட வேண்டுமென்றும், மூவேந்தர் மாண்பு துலங்க 
வேண்டுமென்றும் பற்பல அம்சங்களை இந்நூல் பாடுகிறது.

“எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்; முன்னேற்றம் தான் தருவாய்
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்”

இது தைப்பாவையின் முதல் பாடல். தமிழரின் வாழ்வியல்புகள் பலவற்றையும் சுட்டுகிறது.தைமகள் வருகையால் தமிழர் நலன் மேம்பட வேண்டும் எனும் வாழ்த்தையும் இப்பாடலில் கவியரசர் கூறுகிறார். காதல் கைகூடிய இணையரையும் தைப்பாவை காட்டுகிறது.காதல் கொண்ட தலைவனும் தலைவியும் நேர்பட சந்திக்கையில் நிகழ்பவற்றை நயமுடன் பாடுகிறார் கவியரசர்.

“வா என்றன இமைகள்; மண்நோக்கின விழிகள்
தா என்றன இதழ்கள்;தழுவென்றது மேனி
பார் என்றது பருவம் ;படை கொண்டது நாணம்;
நேர்கின்றது யாதோ..நிலை கொண்டது காதல்.
தேர்கொண்டொரு தெய்வம் தெரு வந்தது போலே
ஊர்கின்றவன் மனதில் உழல்கின்றது காமம்;
சீர்கொண்டவன் எதிரே சிலை கொண்டவள் வந்தாள்
யார் வென்றனர் அறிவாய்;அறிவாய தைப்பாவாய்” என்கிறார்
========================================================================
SWARNA SARASWATHI / ஸ்வர்ண சரஸ்வதி




Save: ₹4.00 
Discount: 10
%
கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020335; 8184020333

========================================================================
SRUTHI SERATHA RAAGANGAL  
சுருதி சேராத ராகங்கள்
₹40.00

₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹4.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020366; 8184020368
========================================================================

SRI VENKATESA SUBRAPATHAM
ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் 
தமிழ்ப் பாடல்கள்
ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

 - SRI ANDAL THIRUPPAVAI
₹40.00 
₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY

Save: ₹4.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184025682; 8184025688


அண்மையில் நான் திருமலைக்குச் சென்றிருந்தபோது ஸ்ரீவேங்கடேச ஸூப்ரபாதத்தைக் கேக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.  இப்போதெல்லாம் அங்கே ஒலிபெருக்கி வைத்து மலை முழுக்கவும் ஸூப்ரபாதம் எதிரொலிக்கும் படி விட்டிருக்கிறார்கள். 
 இதைத் தமிழிலேயே ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று.  கண்ணபிரான் அருளால் கடமையை முடித்துவிட்டேன். 
 ஸூப்ரபாதத்தைச் சந்த விருத்தத்திலும், ஸ்தோத்ரத்தையும் ப்ரபத்தியையும் அகவலிலும் எழுதியுள்ளேன்.  ஆண்டாள் திருப்பாவைக்கு அதிக உரைகள் வந்ததில்லை. 
இதுவும் ஆசையில் விளைந்த ஒன்றே. 

========================================================================


SRI KRISHNA KAVASAM / ஸ்ரீ கிருஷ்ணகவசம்


₹3.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184020243

"துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, 
நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை 
இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக் கொள்ள 
இந்த கவசத்தை தினமும் பாராயணம் செய்யவும். கண்ணனை நினைப்போர் சொன்னது 
பலிக்கும்; இந்த கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்." - கண்ணதாசன்      
"அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவவ் வுலகை ஆக்கும் நிலையே
அடியேம் சரணம் சரணம் சரணம்!" 

========================================================================



SRI KRISHNA ANTHATHI / 











ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - 
 - கவசம் - மணிமாலை - கானம்
₹45.00 
₹40.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹5.00 Discount: 11%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்


9788184020274; 8184020279

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ 
என்று 100 பாடல்களை படைத்திருக்கிறார். ‘கண்ணதாசன்’ இலக்கிய இதழில் தொடராக வெளி 
வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன்  றை ஒன்று விஞ்சும்! 
கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ”ஸ்ரீகிருஷ்ண அந்தாதி ‘யில் இருந்து இரண்டு 
பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு !

“நாடுவதில் மிகத்தேவை 
நம்பிக்கை, வைராக்கியம்,
நல்ல பக்தி; 
தேடுவதில் மிகத்தேவை 
திட சித்தம், தேர்ந்த மனம் 
சிறந்த ஞானம்;
பாடுவதில் மிகத்தேவை 
ஊனுருக, உடலுருகப் 
பாடும் பாவம்;
கூடுவதில் மனைவியினும் 
கண்ணனோடு குழைவாகக் 
கூடு வீரே ! ( 77 )
கூடு வெறும் கூடாகிக் 
கொள்ளியிலே வீழ்ந்து விடும்; 
கொண்ட கோலம் 
காடு வரை வாராது;
கனல் தனையும் வெல்லாது;
கரைந்து போகும்!
ஆடுவதும் பாடுவதும் 
அறுபதிலோ இருபதிலோ
அடங்கிப் போகும் !
வாடுவதில் பயனில்லை;
‘சிக்’கென்று மாதவனை 
வளைப்பீர் நீரே ! (78 )

========================================================================

SIVAPPUKKAL MOOKUTHI/ சிவப்புக்கல் மூக்குத்தி
₹50.00 
₹45.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹5.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020304

கற்றார்க்கும், கல்லார்க்கும் களிப்பாகும் தேனைப்போல் இந்த நாவலிலும் தன் கருத்துக்களையும், 
கவிதை நயங்களையும் முத்திரையாகப் பதித்திருக்கிறார் கவியரசர். 

கண்ணதாசன் இலக்கிய இதழின் மாத வெளியீடாக வந்த 'சிவப்புக்கல் மூக்குத்தி' வந்த 
சுருக்கோடு மறுபதிப்பும் கண்டது.  திரைப்படமாகவும் வந்தது. 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் அமரத்துவம் எய்திய எட்டாவது ஆண்டை நினைவு கூர 
மீண்டும் வந்திருக்கிறது. 
======================================================================

SIVAGANGAI SEEMAI / சிவகெங்கைச் சீமை


₹80.00 ₹72.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%


கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184026535; 8184026536

சிவகெங்கைச் சீமை, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் 
இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் 

பலரும் நடித்துள்ளனர். கண்ணதாசன் திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். 
கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல், சிவகெங்கைச் சீமை. 
சிவகங்கையை பற்றிய தகவல்கள் மற்றும் கதைகளை இந்நாவலில் படிக்கலாம்.

======================================================================

SEPPU MOZHIGAL / செப்பு மொழிகள்
₹50.00 ₹45.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹5.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020151;8184020155



கவியரசரது காலடிச் சுவடுகளில் அவர் கொள்முதல் செய்த அனுபவங்கள் தான் அவரது 
வெற்றிகளுக்குப்படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு 
செப்பு மொழியும் அனுபவத் தழும்பேறி நிற்பதால் சூடும், சுவையும், நையாண்டியும், 
நகைச்சுவையும் சூழ வந்து நம்மை சிந்திக்க வைக்கின்றன. சில வேளைகளில் மனது கொள்ளாது 
நினைத்து நினைத்துச் சிரிக்கவும் வைக்கின்றன. இந்திய ஜனநாயகம் என்ற சொல் கவியரசரின் 
மொழியாளுமையில் புது நிறம் பெற்று விளக்கப்படுவது சிரிப்பதற்கு அன்று; சிந்திப்பதற்கே. 
சகல துறைகளிலும் அவரது எழுத்துகள் தடம் பதித்திருப்பவை எனினும் இத்தொகுதியில் 
செப்பிடும் செய்திகள், அறிவுரைகள் பொலியும் புதிய வார்ப்புகள். இத்தகு சிந்தனைகள் 
இவருக்கே உரிய வலிமை பெற்ற வாசகங்கள்- நமக்கு வழி காட்டிகள்.
======================================================================




SARASUVIN SOUNTHARYA LAHARI / 
சரசுவின் சௌந்தர்ய லஹரி
₹100.00₹90.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹10.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184025446; 8184025440



கவிவேந்தர் கண்ணதாசனின் கவிதை நயம் போல, கவியரசின் கதை நயம் மக்களைப் 
போய்ச் சேரவில்லை. அந்தக் குறையை இந்த சரசுவின் சரசமான கதை, தீர்த்து வைக்கிறது.
முற்பிறவியின் நினைவு வந்தால், அது என்ன பாடுபடுத்தும் என்று இக்கதை மூலம் கவிஞர் 
வருணித்துள்ளார். மூன்று பிறவிகளின் கதையை, முழுக் கதை போல,  விட்டலாச்சாரியார் 
மாய மந்திரக் கதை போல, கவிஞருக்கே உள்ள சிருங்கார சுவையில் எழுதி, நம் மனதில் 
நிறுத்தி விடுகிறார் கவியரசர் கண்ணதாசன்!
======================================================================

SANTHITHEN SINTHITHEN / சந்தித்தேன் சிந்தித்தேன்
₹150.00₹135.00  + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹15.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184026603


அவனது வாழ்க்கை அதிசயமானதுதான். எந்த ஒரு சராசரி மனிதனும் இப்படிப்பட்ட 

வேடிக்கையான வாழ்க்கையை மேற்கொள்ளமாட்டான். அவசரத்தில் காரியம் செய்து, 
சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம்.
இந்த வாரம் அவனை நான் சந்தித்தபோது அவனுக்காக இரக்கப்பட்டேன். நரகம், சொர்க்கத்தை 
உணரத் தெரிந்த அவனுக்கு அதைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருந்தால், இவ்வளவு நீண்ட 
கால வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களை அவன் சாதித்திருக்க முடியும்.
தவறுகளின் மீது நின்றுகொண்டே அவற்றை மறந்துவிட அவன் முயன்றான். அதனால் அவன் 
நெஞ்சு அழும்போதே, வாய் சிரித்துக்கொண்டிருந்தது.
பரமஹம்ஸர் சொன்னதைப் போல பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் 
செலவழித்தான். பரமஹம்ஸரின் கதை இதுதான்.:

======================================================================

ARTHAMULLA INDHU MADHAM - 
BIND VOLUME - NEW EDITION 
அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும்
₹375.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184024913; 8184024916

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு 
தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு 
எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த 
கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. பத்து 
பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் 
ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. 1.கேள்வி: இந்து 
மதத்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் 
பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன்.  அது பற்றித் தங்கள் கருத்து 
என்ன? 
பதில்: மதத்தை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உற்சாகமாகப் பின்பற்றுபவர்கள் வட பகுதியில் அதிகம்; வறட்டு விமர்சகர்கள் தென்பகுதியில் அதிகம்.  அதனால்தான் மதப்பிரச்சாரம் தென்பகுதிக்கே அதிகம் தேவைப்படுகிறது.

=====================================================================
ARTHAMULLA INDUMADHAM - 4
THUNBANGALILRUNDU VIDUTHALAI 
அர்த்தமுள்ள இந்துமதம் - 
துன்பங்களிலிருந்து விடுதலை
₹20.00 ₹18.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹2.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்







9788184020007
======================================================================
(ARTHAMULLA INDUMADHAM - 7) /
SUHAMAANA SINTHANAIGAL 
அர்த்தமுள்ள இந்துமதம் - சுகமான சிந்தனைகள்





₹20.00 ₹18.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹2.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184020038

'எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்பிடி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்பிடித்தான் 
வாழவேண்டும்' என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு. 

======================================================================


UNNAYENEE ARIVAI
(ARTHAMULLA INDUMADHAM - 10)
அர்த்தமுள்ள இந்துமதம் - உன்னையே நீ அறிவாய்
₹18.00 ₹16.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹2.00 Discount: 11%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020069
======================================================================

SANKARA POKKISHAM / சங்கர பொக்கிஷம்





₹40.00 ₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY


Save: ₹4.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184020458

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். 
லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து 
கூறியுள்ளார். சம்சாரியின் அனுபவ ஆற்றலைவிட, ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு சக்தி 
வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள் உதாரணங்கள். இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ 
அறியாத, பல்வேறு விஷயங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில சொற்களை நாம் பேச்சு 
வழக்கில் கையாளுகிறோம். ஆனால் அவற்றின் பொருளை முழுக்க உணர்ந்து 
கொண்டிருப்பதில்லை. அந்தச் சொற்கள் பலவற்றுக்கான விளக்கத்தை இந்த நூலில் காணலாம். 


======================================================================



PONMAZHAI / பொன்மழை


₹40.00 ₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY



Save: ₹4.00 Discount: 10%


கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184026481
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது. 
' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'

' இப்பொழு துரைத்த பாடல் எவெரெங்கும் பாடினாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்
நற்பேரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும்
நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை'

======================================================================




ORU NATHIYIN KATHAI / ஒரு நதியின் கதை


₹40.00 ₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY



Save: ₹4.00 Discount: 10%


கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184025675


உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், 
கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு நதியின் கதை,இது. 
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் - 
எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். 
இந்த நூலில் சில அர்த்த புஷ்டியுள்ள விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றின் உள்ளே உள்ள 
நீரோட்டம் என்ன என்பது எனக்குத்தான் தெரியும். 


======================================================================ORU KAVINGNANIN KATHAI / ஒரு கவிஞனின் கதை


₹55.00




Save: ₹6.00 Discount: 11%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184025712; 8184025718


'ஒரு கவிஞனின் கதை' என்ற தலைப்பைப் பார்த்ததும், 'இது என் வாழ்க்கைக்கதையாக 
இருக்குமோ?' என்ற ஆவல் உங்களுக்குக் கிளம்பி இருக்கும். 

என் வரலாறு இதில் இல்லை;  ஆனால் முடிவாக ஒரு ஆதங்கம் இருக்கிறது. 

ஒரு கவிஞனை பின்னணியாக வைத்து, 'மணி மண்டபம்' என்றொரு திரைக்கதை எழுதினேன்.  
அதை ஒரு  படக்கம்பெனி படமாக எடுத்து.  ஐந்து பாடல்களோடு மூவாயிரம் அடி படமாயிற்று. 
பிறகு பல காரணங்களால் படம் நின்று போயிற்று. 

என் மகன் கண்மணி சுப்பு, 'பொன்னி நூலகத்திற்கு நான் ஒரு கதை எழுத வேண்டும்' என்று 
கேட்டபோது கவிஞனின் கதையையே எழதலாம் என்று எனக்குத் தோன்றியது.  பழைய 
கதைகள் மனதுக்குள்ளேயே ஊறிக் கிடந்ததை இதனை மூன்று நாட்களில் எழுதி முடித்த 
கதைதான் இது. 

======================================================================


RATHTHA PUSHPANGAL / ரத்த புஷ்பங்கள்















₹40.00 ₹36.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹4.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184020311; 8184020317


தலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட 

அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாகக் கொண்டு கவியரசர் இந்தக் கதையை 
உருவாக்கினார். 
1961 - இல் 'டாக்டர் சம்பத்' என்ற நாடகமாக எழுதினார்.  அதில் டாக்டராக நடிக்கவும் செய்தார். 
அதன் பத்து வருஷங்களுக்குப் பிறகு, அதையே தனது மாத இதழின் சார்பில் 'ரத்த புஷ்பங்கள்' 
என்று பெயரிட்டு நாவலாக எழுதி வெளியிட்டார். 
என்றும் இளமை குன்றாத தமிழைப் போல கவியரசரின் தமிழ்நடை இனிமை குன்றாதது.
======================================================================

OOMAIYAN KOTTAI / ஊமையன் கோட்டை




₹80.00 ₹72.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹8.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184027143


"ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை 
எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் 
சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் 
ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான 
செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், 
வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்நாவலின் 
காட்சிகள், அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது." 

======================================================================


CHERAMAN KAADHALI / சேரமான் காதலி



₹300.00 ₹270.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY
Save: ₹30.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

9788184026184; 8184026188

‘சேரமான் காதலி’ என்ற புதினம் 1980ல் கண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 
அதாவது கி.பி. 798இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் 834இல் தான் மெக்காவுக்குப் 
போகிறார். அவரது 36 ஆண்டு ஆட்சியை நான் கதைப் போக்குக்காகச் சுருக்கிக் 
கொண்டிருக்கிறேன். அதைத்தவிர, அனைத்தும் கலை நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவையே. 
சேரமான் பெருமாள் வரலாற்றிலும் மதக் கருத்துக்களைச் சொல்வதற்கு நிறைய இடம் இருந்தது. 
காரணம், இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் ஆனது, வைணவக் 
கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. அவரது திருமகன் வேணாட்டடிகள் என்ற 
பட்டப் பெயரோடு சைவப் பெரியாராக வாழ்ந்தது சைவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக 
இருந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் மதம் மாறி மகமதியரான குறிப்பும் இருந்தது.

======================================================================


MANAVASAM / மனவாசம்


₹130.00₹117.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY

Save: ₹13.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்

கவிஞர் கண்ணதாசன்




1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பதுக்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் 
என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது. சொந்த நிறை குறைகளையும் தொழில் 
முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட 
பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து 
கவிஞர் கவிஞர் சுய சரிதை எழுதியுள்ளார்.

======================================================================


KANNADHASAN MANATHUKKU THOOKAMILLAI
கண்ணதாசன் மனதுக்குத் தூக்கமில்லை


₹140.00₹126.00 + FREE SHIPPING + 2-3 DAYS DELIVERY

Save: ₹14.00 Discount: 10%

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம்
9788184028232; 8184028237


அண்மைக் காலங்களில் நான் எழுதிய நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது இது. 
இதன் கதையில் சரிபாதி என் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு கதாசிரியன் 
சில குறிப்பிட்ட பாத்திரங்களில் அதிகம் பிரியத்தைக் காட்டினாலும் அதிகம் வெறுப்பைக் 
காட்டினாலும் இரண்டோடும் அவனுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகப் பொருள். கடல் 
கடந்த யமுனா. ஒரு கண்ணீர்க் காவியம். அவளது காதலையும் மனக்குமுறலையும் 
ஆதங்கத்தையும் பல ஆண்டுகள் கழித்தே தெரிந்துகொண்ட மோகனம்.
======================================================================


Other books of Kavignar Kannadasan will be posted separately.

Happy Reading!





#VELANGUDITHIRUVILA / #வேலங்குடித்திருவிழா
#VAZHKAIENUMSAALAIYILAE / #வாழ்க்கைஎனும்சாலையிலே
#VANAVASAM / #வனவாசம்
#THOTTATHUPPOOKKAL #தோட்டத்துப்பூக்கள்
#கவிஞர்கண்ணதாசன்
#THIRUKKURAL #KAAMATHUPPAAL
#THENDRALVALARTHATAMIL #தென்றல்வளர்த்ததமிழ்
#THAIPAVAI #தைப்பாவை

#SWARNA SARASWATHI / #ஸ்வர்ணசரஸ்வதி

#SRUTHISERATHARAAGANGAL

#சுருதிசேராதராகங்கள்
#SRIVENKATESASUBRAPATHAM

#ஸ்ரீவேங்கடேசஸுப்ரபாதம்

#தமிழ்ப்பாடல்கள்

#ஸ்ரீஆண்டாள்திருப்பாவைவிளக்கஉரை
#THALAIYANGANGAL

#SIVAPPUKKALMOOKUTHI/ #சிவப்புக்கல்மூக்குத்தி

#SIVAGANGAISEEMAI / #சிவகெங்கைச்சீமை

#SEPPUMOZHIGAL / #செப்புமொழிகள்

#SARASUVINSOUNTHARYALAHARI /

#சரசுவின்சௌந்தர்யலஹரி

#SANTHITHENSINTHITHEN / #சந்தித்தேன்சிந்தித்தேன்

#ARTHAMULLAINDHUMADHAM

#அர்த்தமுள்ளஇந்துமதம்10பாகங்களும் #ARTHAMULLAINDUMADHAM4

THUNBANGALILRUNDU VIDUTHALAI

#அர்த்தமுள்ள #இந்துமதம் -

#துன்பங்களிலிருந்துவிடுதலை
#ARTHAMULLAINDUMADHAM7

#SUHAMAANASINTHANAIGAL
#UNNAYENEEARIVAI

#ARTHAMULLA INDUMADHAM10

#அர்த்தமுள்ளஇந்துமதம் #உன்னையேநீஅறிவாய்
SANKARA POKKISHAM / #சங்கரபொக்கிஷம்
PONMAZHAI / #பொன்மழை

#ORUNATHIYINKATHAI / #ஒருநதியின்கதை

#ORUKAVINGNANIN KATHAI / #ஒருகவிஞனின்கதை
#OOMAIYANKOTTAI / #ஊமையன்கோட்டை

#CHERAMANKAADHALI / #சேரமான்காதலி

#MANAVASAM  #மனவாசம்


#KANNADHASANMANATHUKKUTHOOKAMILLAI

#கண்ணதாசன்மனதுக்குத்தூக்கமில்லை
#RATHTHAPUSHPANGAL #ரத்தபுஷ்பங்கள்

#அர்த்தமுள்ளஇந்துமதம் #சுகமானசிந்தனைகள்
SRIKRISHNAKAVASAM #ஸ்ரீகிருஷ்ணகவசம்

#SRIKRISHNAANTHATHI
#ஸ்ரீகிருஷ்ணஅந்தாதிபாமாலை

#கவசம் #மணிமாலை #கானம்
#SRIANDALTHIRUPPAVAI

#கவிஞர்கண்ணதாசன்தலையங்கங்கள்
#திருக்குறள்காமத்துப்பால்உரை
#கண்ணதாசன்பதிப்பகம்













































Comments

Popular posts from this blog

எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்