எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்
எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்! பாலகுமாரன் அவரின் எழுத்துக்கள் தொடாத பக்கங்கள் என இலக்கியத்தில் இல்லை. அவர் ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளர், புதின எழுத்தாளர். புதினத்தில் கூட அவர் தன்னை சிறு வளையத்துக்குள் மாட்டாமல் அனைத்துவித ரசிகர்களையும் கொண்டிருந்தார். அவரின் புதினத்தில் திகில் கதைகள், சரித்திர புதினங்கள், ஆன்மிகம், மனிதர்களில் உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறு, குடும்ப வாழ்க்கை, காதல் என அவரின் வாசகர்களை அனைத்துவித எழுத்துக்கும் பழக்கப்படுத்தியவர். அவரின் கதைகள் நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும், ஒரு பெண் / ஆண் தத்தம் துணைகளின் மனதை, அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை புரியவைக்கும், விட்டுக்கொடுத்தலை கற்றுக்கொடுக்கும், வாழ்க்கையில் தவறினாலும் நமது வாழ்க்கையை நேர்மையாக வாழ கற்றுக்கொடுக்கும், மனிதத்தன்மையை தரும், நமது சரித்திரத்தை எண்ணி இறுமாப்பை கொடுக்கும், எப்படி அரசன் வீழ்ந்தான் எனவும் ஒவ்வொரு அரசனும் எவ்வாறு ஆட்சி செய்தனர், நமது பண்டையக்கால வாழ்க்கை முறை, உணவுமுறை, ஆரோக்கியம், குருவின் தேவை என பலதை கற்றுக்கொடுப்பதன் மூலம் வாழ்க்கையை நோக்கும் முறையே மொத்தத்த