குமார் ராஜசேகர் கவிதைகள்
கவிதை 1: காஞ்சி நகரில் வாழ்கின்றாள் கருணையுள்ள காமாக்ஷி அவள் கடைக்கண் பார்வை பட்டாலே விலகும் நம் துயரே பனி போலெ விண்ணும் மண்ணும் அவள் மடியே வேதங்கள் நாலும் அவள் மொழியே வெறும் கற்பூர தீபம் ஏற்றிடினும் பெரும் கடல் போல கருணை அவள் பொழிவாள் நம்பா மாக்கள் ஆயிடினும் தனை நம்பும் மக்கள் ஆக்கிடுவாள் காஞ்சி நகரில் வாழ்கின்றாள் கருணையுள்ள காமாக்ஷி #குமார்ராஜசேகர்கவிதைகள் #காமாக்ஷிகவிதைகள் -------------------------------------------------------------------------------------------------------------------------- கவிதை 2: வானத்து வெண்நிலவு வடிவு கொண்டு வந்த மங்கை பாறைக்கு பரிசளித்தாள் தன் பட்டு உடல் தீண்ட நிலாள் பார்த்த நான்