மெரீனா இயற்றிய புத்தகங்கள் - 1.காதலென்ன கத்திரிக்காயா? 2.நாத்தனார் கலகம்
எழுத்தாளர் பற்றி : மெரீனா: இவருடைய இயற்பெயர் T.S.ஸ்ரீதர். இவருடைய தந்தை T.S.சேஷாசலம். அவரும் ஒரு எழுத்தாளர். 1928 முதல் 35 வரை ஏழு ஆண்டு காலம் ' கலா நிலையம்' என்ற இலக்கிய வார ஏட்டை நடத்தி வந்தவர். மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் என்று பன்முகத்தன்மை வாய்ந்த பரணீதரன் என்று பரவலாக அறியப்படும் டி.எஸ். ஸ்ரீதரன். டிசம்பர், 1925-ல் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை புரசைவாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் தொடங்கி, தி.நகர் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் முடித்து, பின்பு லயோலா கல்லூரியில் B.Com., பட்டப்படிப்பை பெற்றார். பள்ளி நாட்களிலேயே ஓவியம் தீட்டுவதில் திறமை இவருக்கு உண்டு. 1948 ஆனந்த விகடனில் Free-Lance கார்ட்டூனிஸ்டாகச் சேர்ந்தார். பிறகு 1956 முதல் உதவி ஆசிரியராகப் பணியாற்றி, 1985-ல் இணை ஆசிரியராகி, ஓய்வு பெற்றார். இவர் 1970 முதல் சமூக நாடகங்கள் எழுதத் தொடங்கினார். இவருடைய முதல் நாடகமான 'தனிக் குடித்தனம்' - 1970-ல் மேடையேறி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸாம்பியா போன்ற மேலை நாடுகளில் பெரும் புகழ் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நாடகம் L.P.Record